தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Tuesday 11 December 2018


முன் வைக்கப்படும் கோரிக்கைகள்
            1.     அக்டோபர், நவம்பர் மாத சம்பள பிரச்சனை
        2.     EPF, ESI , BONUS முறைகேடுகள்
            3.     வேலையிலிருந்து நீக்கப்பட்ட தோழர்களுக்கு  உடணடியாக பணி
            4.     ஆட்குறைப்பு
            5.     பணி மாற்றல்கள்
           6.     2009 நிலுவை தொகை
           7 .     பணித்தன்மைக்கேற்ப ஊதியம்
           8.     தொழிலாளர் நல ஆணையத்தில் ஒப்பந்தகாரர் மீது புகார் அளிப்பது


Tuesday 20 November 2018

NFTE - TMTCLU
கடலூர் மாவட்டம்

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை கண்டித்து NFTE TMTCLU  சார்பில் 17.11.2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதன் விளைவாக மாவட்ட நிர்வாகம்  ஒப்பந்தக்காரை உடணடியாக ஊதியம் வழங்க உத்திரவிட்டது . ஒப்பந்தக்காரர்  (20-11-2018 ) இன்று நமது மாவட்டத்தில் அணைத்து தோழர்களுக்கும் முதல் தவணையாக ரூபாய் 5000 /- வழங்கியுள்ளார்.

இருப்பினும் நமது மாவட்ட சங்கம் முழுமையான ஊதியம் வழங்க வேண்டமென்றும், 2009க்கான நிலுவை தொகையினை வழங்க வேண்டும் எனவும், விடுப்பட்ட தோழர்களை பணியமர்த்த வேண்டியும் வரும்   22-11-2018 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டமும், 28-11-2018 அன்று கடலூர் பொது மேலாளர் அலுவலக முன்பாக மாபெரும் தர்ணா நடைபெறும்.

ஆகவே நமது உரிமையை நிலைநாட்டிட!....
ஒன்றுபட்டு போராடிடுவோம்!...
வெற்றி பெறுவோம்!...
         
தோழமையுடன்
NFTE-TMTCLU

                                                          மாவட்டச் சங்கங்கங்கள்
                                                                        கடலூர்  
புயல் பாதிப்புதுயர் துடைக்க முன்வருவீர்!


அன்புள்ள தோழர்களே, தோழியர்களே!
            வணக்கம்நாம் தான் எதிர்பார்த்தோம், நம்மைத் தேடி வருமென்று!   தயாராகக் கூட இருந்தோம். அனுபவப்பட்டவர்களாயிற்றே!    கஜா புயல் குறித்துத்தான் இந்த வேண்டுகோள்!
          தானே தந்த துயரம் தலைமுறையும் மறவாது.  ‘கேட்டிலும் நன்மை உண்டு என்பார் வள்ளுவர்அல்லலுற்று கையறுநிலையில் இருக்கும் போதுகை கொடுப்பார் யார்? கண்ணீர் துடைப்பார் எவர்? வாரி வழங்கா விடினும், ஆறுதலாய் ஒருசொல் கூறவோர் மனிதருண்டோ?
           மனித மனங்கள் பதறுரும்அதை நாம் அனுபவித்திருக்கிறோம் …  அது மட்டுமாமனிதம் இன்னும் மாண்டுவிடவில்லை என்று உதவிக்கரங்கள் ஓடோடி வந்தனபாலம் கட்டுவதாய் பெரும் பணி, அணிலாய் அதில் சிறு பங்கு எனகுடந்தை, தஞ்சை, கோவை, காரைக்குடி, சேலம்  என  தோழர்கள் நிவாரணப் பொருட்களோடு வந்தார்களே …   நம் நெஞ்சை எல்லாம் நிறைத்தார்களே...

                தமிழகத்திற்கே சோறிடும் சேற்று பூமியாம் காவிரிப்படுகை மாவட்டங்கள் இன்றுகஜா புயலடித்து ஓய்ந்த பின்னும்புயலின் பாதிப்பிலிருந்து மீளாதிருக்கின்றனர்தஞ்சை விவசாயிகளின் கவலைஆச்சரியப்பட வைக்கிறது.
                வள்ளுவர் வாழ்த்திய விவசாயியல்லவா, என் பசிக்கு இன்று யார் தருவார் என்பது அவர்கள் கவலை யில்லையாம். . . நாளை தமிழகம் அரிசி இன்றி பசியால் வாடுமோபுயலால் இந்த போகம் போனதேபோன கரண்டு இன்னும் வரலையே . . . எப்படிப் பயிர் வைப்பேன்வானம் பார்த்து ஓங்கிய தென்னை போர்க்களத்து வீரர்களாய் முறிந்து போனதுவே …  மகிழ்வைக் கூட்டும் குடந்தையின் வெற்றிலைக் கொடிக்கால்கள் நாசமானதுவேஎன    அழுவது அல்ல, எழுவது என்று அவர்கள் மனத்தளவில் தயாராகி விட்டார்கள்
நாம் என்ன செய்யப் போகிறோம்?
                புயல் காணா புதுக்கோட்டை, வேதாரண்யம், இராமநாதபுரம் என புதிது புதிதாய்  இடங்களைத் தேடி புயல் புரட்டிப் போட்டு விட்டு சென்றுள்ளது.

நாம் என்ன செய்யப் போகிறோம்?
கோவையில் நடைபெற்ற நமது மாநிலச் செயற்குழுவில் இந்தப் பிரச்சனை விவாதிக்கப்பட்டபோது –       உங்களின் உதவும் கரங்களை நம்பி --      பிறர் துயர் காணச் சகியாத நெஞ்சின் ஈரம் எண்ணி--   நமது மாவட்டச் சங்கத்தின் சார்பில் புயல் நிவாரண நிதியாக          முதல் தவணை   தொகை  ரூபாய் பத்தாயிரம்  ரூ10,000/--                 வழங்கி உள்ளோம்.                விரைந்து உங்கள் பங்கைச் செலுத்துங்கள் எனத் தோழமையோடு  வேண்டுகிறோம் !
            கூடுதலாக நிதி திரண்டி, இரண்டாம் தவணையைத் தந்திடுவோம்!
            புயலெனப் புறப்படுங்கள் !   மழையெனப் பொழியுங்கள்,  நன்கொடைகளை !!
 எவ்வளவு வழங்கினாலும் நமது உள்ளம் திருப்தியுறாதுஏனெனில் கைமடங்கா விவசாயிகள் கை ஒடிந்து உள்ளார்கள்.   நமது நெஞ்சம் சற்றே அமைதியுற அள்ளித் தாருங்கள் எனத்

தோழமையோடு வேண்டும்,
 G. கணேசன்                       A.S. குருபிரசாத்                    இரா. ஸ்ரீதர்

                     மாவட்டத் தலைவர்                  மாவட்டப் பொருளாளர்            மாவட்டச் செயலாளர்

Thursday 15 November 2018

சம வேலைக்கு சம ஊதியமும்
                    உச்ச நீதிமன்ற தீர்ப்பும்

அன்புள்ள தோழர்களே வணக்கம்!..
   சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இரண்டு தொழிற்ச்சங்க தலைவர்கள் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர் தொழிலாளிக்கு எதிராக தீர்ப்பு வந்தது இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்  உச்ச நீதி மன்றம் பல்வேறு தீர்ப்புகளை ஆராய்ந்து 26/10/2016 அன்று அரசுத்துறை பொதுத்துறை தனியார் துறை ஆகிய துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலார்கள் அனைவரும் மனிதர்களே அவர்களும் மதிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ளது ஆகவே ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

 அதன் அடிப்படையில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர் அந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 14/11/2018 அன்று ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது கேஷ்வல் மஸ்தூர் ஒப்பந்த ஊழியர்கள் தினக்கூலி ஆகியோருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதோடு நிர்வாகத்தில் காலி இடம் இருந்தால் அவர்களை கொண்டு நிரப்ப வேண்டுமென்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனை பெறுவதற்க்கு TMTCLU  மாநிலச்சங்கம் ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது இதற்க்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது தேவை எல்லாம் ஒற்றுமைதான் ஒன்றுபடுவோம்..... நிரந்தர ஊழியர்களோடு......  சேர்ந்து போராடுவோம்...
                  நாளை நமதே.......
தோழமையுடன்
 ஆர் செல்வம்
                                                                                                           பொதுச் செயலர்

                                                                                                                 TMTCLU