தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com
Monday 30 January 2017
Friday 27 January 2017
NFTE - TMTCLU
தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த
தொழிலாளர் சங்கம்
மாநிலந்
தழுவிய கருத்தரங்கம் – கடலூர்.
தீர்மானங்கள்
1 நமது NFPTE மத்திய சங்கம் 1986-ல் CPWD
இலாக்கா ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற
உச்ச நீதிமன்ற தீர்ப்பினை தொலைத்தொடர்பு இலாக்காவில் பணிபுரியும் மஸ்தூர்
தோழர்களுக்கும் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்து NFPTE சம்மேளனம் 1986-ல் போராடி பெற்று தந்தது போல 26-10-2016 அன்று
உச்ச நீதிமன்றம் வழங்கிய சம வேலைக்கு சம
ஊதிய தீர்ப்பினை BSNL பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அமுல்படுத்தப்பட வேண்டும் என்று BSNL நிர்வாகத்தினை கேட்டுக் கொண்டு
அதனை கறாக அமுல்படுத்திட நமது NFTE மத்திய சங்கம் முயற்சி
எடுத்திட வேண்டும் என இக் கருத்தரங்கத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்..
2.பணி தன்மைக்கேற்ப ஊதியம்
தமிழ்
மாநில முழுவதும் BSNL-ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் பணித்தன்மைக்கேற்ப ஊதியம்
கேரளா மாநில BSNL நிர்வாகம் வழங்குவது போல் தமிழ்
மாநிலத்திலும் வழங்க வேண்டும் என்று மாநில நிர்வாகத்தை கேட்டு வந்தோம். மாநில நிர்வாகம் மத்திய அலுவலகத்திற்கு
( காப்பரேட் அலுவலகம்) பணித்தன்மைகேற்ப ஊதியம் வழங்கிட விளக்கம் கோரி கடிதம்
எழுதப்பட்டுள்ளது. ஊதியத்தை விரைவில் பெற்றிட மத்திய சங்கம் நடவடிக்கை எடுத்திட
இக்கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.
3.போனஸ்
BSNL தமிழ் மாநில நிர்வாகம் நமது மாநில சங்கத்துடன்
ஒப்புக்கொண்டு போடப்பட்ட உத்தரவின் அடிப்படையில் தமிழ் மாநிலம் முழுவதும்
பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச போனஸ் 8.33 , ரூ 7000/- வழங்க
வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் போடும் ஒப்பந்த புள்ளி படிவத்தில் பதிவு செய்ய
வேண்டும் என்று மாநில நிர்வாகத்தை இந்த கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது
4.தமிழ் மாநில நிர்வாகம் நமது மாநில சங்க
நிர்வாகிகளோடு 20.10.2016 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எல்லா மாவட்ட
நிர்வாகத்திற்கும் கடிதம் எழுதியது . ESI.EPF பிடித்தம் செய்த முறையாக கட்ட வேண்டும். அடையாள
அட்டை வழங்க வேண்டும். 8 மணி நேர வேலை ஊதியம் ( 8 மணி நேர வேலை செய்து 6 மணி
நேரத்திற்கு ஊதியம் வழங்கும் இடங்களில்) . மாதம் 7ந் தேதிக்குள் ஊதியம் பட்டுவாட
செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கையை தீர்ப்பதற்கு ஒரு கண்கானிப்பு
அதிகாரி நியமனம் செய்து 30.11.2016க்குள் மாநில நிர்வாகத்திற்கு பதில் கொடுக்க
வேண்டும் என்று கடிதம் எழுதியது . பல மாவட்ட நிர்வாககங்கள் அதனை அமுலாக்கம்
செய்யவில்லை. உடனடியாக மாநில நிர்வாகம் தலையிட்டு அமுலாக்கிட உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
5. BSNL ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும்
உச்சநீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்தி சமவேலைக்கு சம ஊதியம் பெற்றிட மத்திய சங்கம் AITUC-யின் அறைகூவல் அனைத்தினையும் TMTCLU தமிழ்மாநில சங்கம் வெற்றிகரமாக்கிட வேண்டும் என்று கருத்தரங்கம்
கோருகிறது.
6. BSNL ஒப்பந்த ஊழியர்களுக்கு சமவேலைக்கு சம
ஊதியம் அமுல்படுத்திட உச்ச நீதிமன்ற தீர்ப்பை DOT / BSNL வழிமொழிந்திட செய்யுமாறு NFTE மத்திய சங்கத்தை இக்கருத்தரங்கம்
கேட்டுக் கொள்கிறது.
7. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தி
தமிழ் மா நிலத்தில் BSNL ஊழியர்களுக்கு சம
வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்வு காண தோழமை சங்கங்களுடன் இணைந்து
போராட்டம் நடத்திட இக்கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.
8. கருத்தரங்கம் முன்வைத்த தீர்மானங்களை அனைத்து மாவட்டங்களில்
விழிப்புணர்வு உருவாக்கிட NFTE சங்கத்துடன் இணைந்து பிரச்சாரக் கூட்டங்கள்
பிப்ரவரி மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று இக்கருத்தரங்கம் கேட்டுக்
கொள்கிறது.
தோழமையுடன்
ஆர்.கே M.விஜய் ஆரோக்யராஜ் R.செல்வம்
தலைவர் பொருளாளர்
பொதுச்
செயலர்
TMTCLU,
NFTE - TMTCLU
சம வேலைக்கு ...சம ஊதியம் - திருவாரூர்
திருவாரூரில் ...25.1.2017 ல் ..
சம வேலை சம ஊதிய கருத்தரங்கு ...
175 ஒப்பந்த தொழிலாளர்கள்
திரண்டிருந்தினர் ...
அடையாள அட்டை ...அடைவது ...
சம்பளப்பட்டியல் ...பெறுவது ...
அடிப்படை கோரிக்கைகள் வெல்வது ...
கோரிக்கை விரைவில் அடைய ...
களம் ...விரிவடைந்தது ....
TMTCLU மீதான நம்பிக்கை ...
எண்ணிக்கையில் தெரிந்தது ....
நம்பிக்கையை விதைத்தது ....
தோழமையுடன்
NFTE – TMTCLU
மாவட்ட சங்கங்கள், குடந்தை.
Thursday 26 January 2017
Saturday 21 January 2017
ஒப்பந்த ஊழியர்களுக்கு
மத்திய அரசின்
குறைந்தபட்ச ஊதிய உத்தரவு
1970 ஒப்பந்த ஊழியர்கள் ( ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்ட விதி 25 ல் துணை விதி 2 ன் கீழ் iv என்பது சம்பளம் எப்படி அமைய வேண்டும் எனப் பேசுகிறது. அது 1948 சட்டத்தின் படி அல்லது ஒருவர்க்கொருவர் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டபடி அல்லது குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி அமையலாம் என்கிறது. இந்த நிலையில்தான், குறைந்த பட்ச ஊதியத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்ற மத்திய சங்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக மார்ச் 30, 2016 ல் ரூபாய் 10 ஆயிரம் கொடுக்க வரைவு அறிக்கை (Draft மசோதா) வந்தது. அது நகல் மசோதாவாகவே இருக்கிறதே தவிர கெசட் நோட்டிபிகேஷனாக உத்தரவாக வெளிவரவில்லை. இந்த நகல் மசோதாவை எதிர்த்தே முதலாளிகளின் சம்மேளனங்கள்/அமைப்புகள் பலத்த எதிர்ப்புக் குரல் எழுப்பத் தொடங்கி விட்டன, இன்றைக்கு நாம் வாங்குகின்ற சில ஆயிரத்தை விட மசோதாவின் சிபாரிசு அதிகம் என்றாலும் நாம் முன் வைத்த கோரிக்கை குறைந்த பட்சம் ரூபாய் 15,000/=.
ஆனால் ஏழாவது சம்பளக் குழு அறிக்கைக்கு பின்னர் மத்திய சங்கங்களின் கோரிக்கை ரூ 18,000/=. இது தர்க்க அடிப்படையிலானது.
நகல் மசோதா பற்றி அமைச்சர்கள் குழு, நிதி அமைச்சர் திரு அருண் ஜேட்லி மத்திய தொழிற்சங்க அமைப்புகள் முதலாளிகள் பிரதிநிதிகளுடன் பேசியது. ரூபாய் 9100/- (26நாட்கள்xரூ.350) குறைந்த பட்சமாக மாற்றியமைக்கலாம் எனத் தெரிவித்தது. ஆனால் நம்முடைய தொழிற்சங்கங்கள் இந்த அநீதியை ஏற்க மறுத்து விட்டன.. இதனை
அடிப்படியாக வைத்து கடந்த செப்டம்பர் 2-ல் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்தை மத்திய
தொழிற்சங்கங்கள் வெற்றிகரமாக நடத்தின. நாமும் நமது பகுதியில் (non-executive) இந்த
வேலை நிறுத்தத்தில் கலந்து பெரும்பான்மையாக கலந்துகொண்டோம்.
பொது வேலைநிறுத்தத்தின்
பலனாக மத்திய அரசு Gazette notification-யை
உத்தரவாக வெளியிட்டுள்ளது. செப்டம்பர் பொது வேலை நிறுதத்தில் ஈடுபட்ட அனைத்து
தொழிற்சங்கங்களுக்கும், அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி. இந்த உத்தரவு வெளி வர அழுத்தம் கொடுத்த நமது
AITUC சங்கங்கத்திற்கு நன்றி...
நாம் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையினை
வலியுறுத்தி வரும் வேளையில் இந்த உத்தரவு சற்று ஆறுதலாக உள்ளது. இருப்பினும் இந்த
உத்தரவின் சாதகம் , பாதகம் பற்றி பின்னர் சந்திப்போம்.
Friday 20 January 2017
Wednesday 18 January 2017
ஜல்லிகட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம்
பண்பாட்டை ...கலாச்சாரத்தை ...அழித்து...
வேடிக்கை பார்க்கும் ...மத்திய அரசை ...
மோடி சர்க்காரை ...கண்டித்து ..
பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி ...
ஜல்லிக்கட்டு தடையை அவசர சட்டம் மூலம் நீக்க ...
வலியுறுத்தி நடைபெறும் ...
மாணவர் தன்னெழுச்சி போராட்டத்திற்கு ...
ஆதரவு தந்திடும் வகையில் ....
தமிழ் மாநிலம் தழுவிய ...
NFTE -TMTCLU சங்கத்தின் சார்பில் ....
19.1.2017 -வியாழன்
ஆதரவு
கண்டன ஆர்ப்பாட்டம்
அனைவரும் ...பெருந்திரளாய் பங்கேற்கவும் !
தோழமையுடன் ...
ஆர் கே - R .செல்வம் -M .விஜய்
தலைவர் - செயலர் - பொருளர்
Friday 13 January 2017
கடலூர் மாவட்ட சங்கங்களின்
பாராட்டுதல்களும்நன்றியும்
அன்பான தோழர்களே !
மனம் நிறைவாய் இருக்கிறது, அனைவரும் பாராட்டும்படியான நினைவில் நிலைநிற்கும் ஒரு கருத்தரங்கத்தை நடத்தி முடித்திருக்கிறோம்.
இதன் வெற்றிக்குப் பாடுபட்ட ஒவ்வொரு தோழர்களுக்கும் நமது நன்றியையும்பாராட்டுதல்களையும் உரித்தாக்குகிறோம்.
நிதி திரட்ட உழைத்தவர்கள், தங்கள் சொந்தப் பணிகளைத் தள்ளி வைத்துஉடலால் உழைப்பை நல்கியவர்கள், ஊழியர்களைத் திரட்டியவர்கள் எனஒவ்வொருவரையும் தனித்தனியே போற்றிப் புகழத் தக்க பணியைஆற்றியிருக்கிறீர்கள்.
நிதி திரட்டியது மட்டுமல்லாமல்,மளிகைப் பொருட்கள், அரிசி மூட்டை,வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு,தண்ணீர் பாட்டில் என தாராளமாகபொறுப்பேற்றுக் கொண்டீர்கள், நன்றி தோழர் களே !
முதல் நாள் இரவு உணவு , காலைச் சிற்றுண்டி, முற்பகல் வடை தேனீர், மதியம்சுவையான அசைவ உணவு என ஒவ்வொன்றும் அருமை என தமிழகம்முழுவதிலிமிருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் பாராட்டினார்கள் என்றால் அந்தப்பாராட்டு முழுவதும் நம் தோழர்களை –--குறிப்பாக, கீழே குறிப்பிடப்படும் தோழர்களையே—--சேரும். வாழ்த்துக்கள் தோழர்களே!
நன்றிக்குரிய நம் தோழர்கள்
A.S. குரு பிரசாத், மாவட்ட அலுவலகம், கடலூர்
R. குணசேகரன், ---
do---
K. செல்வராஜ், நெல்லிக்குப்பம்
K. குமார், செஞ்சி
P. குமார், நெல்லிக்குப்பம்
V. இளங்கோவன், அரகண்ட நல்லூர்
S. இராஜேந்திரன், மாவட்ட அலுவலகம், கடலூர்
D. குழந்தைநாதன், கடலூர்
S. வெங்கட், பரங்கிப்பேட்டை
A. பீட்டர், நெல்லிக்குப்பம்
V. கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம்
R. நந்தகுமார், பண்ருட்டி
R. சுப்பிரமணியன், கடலூர்
A.C.முகுந்தன், கடலூர்
இறுதியாக, கருத்தரங்கம் வெற்றி பெறுவதற்கு நிதி அளித்த அனைத்துஅதிகாரிகள், தோழமைச் சங்க நண்பர்கள் மற்றும் நமது சங்கத் தோழர்கள்அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்!
நெடுந்தொலைவிலிருந்தும் மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாதுகாலத்தே வந்திருந்து பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றி! நன்றி! நன்றி!
வாழ்த்துகளுடன்,
தோழமையுள்ள
மாவட்டத் தலைவர் / மாவட்டச் செயலர்
NFTE TMTCLU
கடலூர் மாவட்டச் சங்கங்கள்
Subscribe to:
Posts (Atom)