தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Saturday 29 July 2017

சமவேலை...சம ஊதியம் ...பேரணி ...சென்னை







சென்னை கொளுத்தும் வெயிலுக்கு ...
இணையாக கோபத்தோடு திரண்ட இளைஞர்கள் கூட்டம் ...
குடந்தை மாவட்டத்திலிருந்து 75 பேர் பங்கேற்ற ...
பெருந்திரள் பேரணி ...


மாநிலம் முழுவதும் TMTCLU சார்பில்  500 தோழர்கள் ...
மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பின் சார்பில் 25000...பங்கேற்க ..
சமவேலை...சம ஊதியம் ...பேரணியை ...
தோழர் நல்லகண்ணு துவக்கிவைத்தார் ...

சென்னை சாலைகளில் ..
இரண்டு .... " டி" அரசுகளை கண்டித்து ...
மோ "டி" மற்றும் எடப்பா "டி"
அரசுகளை கண்டித்து முழக்கம் ...
வாகனங்களுக்கு பதில் சாலைகளை நிரப்பியது ...

நிறைவில் ...
தோழர்கள் மூர்த்தி ..சுப்பராயன் ...முத்தரசன் ..
தோழியர் வஹிதா கண்டன உரையாற்ற ...
தோழர் தா .பா நிறைவுப்பேருரை தந்தார் ...

மாநிலம் முழுவதும் ... TMTCLU  தோழர்கள் ...
கடும் பொருள் செலவு பாராது ..
NFTE  TMTCLU  மீதான நம்பிக்கை சுமந்து ...குவிந்தனர் ..
நம்பிக்கை ..வீண்போகாது ..எனும் நம்பிக்கையில் ...
ஜிந்தாபாத் ...

Wednesday 26 July 2017

பணித்தன்மைக்கேற்ப ஊதியம்


         நமது மாநிலச் சங்கங்களின் தொடர் முயற்சியின் காரணமாக நமது நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணித்தன்மைக்கேற்ப ஊதியம்   வழங்கிட  மாநில நிர்வாகம் உத்திரவு வழங்கியுள்ளது.   நமது NFTE , TMTCLU  மாவட்ட சங்க நிர்வாகிகள் இதன் மீது உரிய கவனம் செலுத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம். மற்றும் தொழிலாளர் மீது அக்கறையோடு செயல்பட்ட நமது NFTE , TMTCLU  மாநிலச் சங்களுக்கு நன்றி..



Saturday 22 July 2017





  உச்ச நீதிமன்ற தீர்ப்பு 
சம வேலைக்கு சம ஊதியம்
மாநிலம் தழுவிய கருத்தரங்கம்


 முன்னாள் மாநிலச் செயலர் தோழர் பட்டாபி தமது உரையில்:

          தோழர்களே இந்த கருத்தரங்கம் யாரையும் திருப்திப்படுத்த அல்லயாரையும்   விமர்சனம்  செய்யவும் அல்ல.  நிஜ நாடகம்அறிவிப்பு நிலையிலேயே பல விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.  ஆனால் அந்த நாடகமும் கூட அரசுக் கொள்கைகளைவிமர்சித்துத்தான் நம்முன்னே நடித்துக் காட்டப்பட்டது.
          இன்றைய அரசு public employment எனப்படும் அரசு வேலை / அரசுப் பணி என்பதை வெகுவாகக் குறைத்து   ஒப்பந்த முறைபணிகளை அதிகப்படுத்தி வருகிறது.  பொதுச் சேவையை வழங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களிலும் கான்டிராக்ட் மூலமாகதனியார் பணியமர்த்தல் ஒப்பந்தம் மூலமாகவே வேலைகள் நடைபெறுகின்றன.  அந்தத் தொழிலாளிகள் BSNL க்காக வேலைசெய்வார்கள் ஆனால் அவர்களின் முதலாளி கடலூரில் பாலாஜி ஏஜென்சி போல ஒரு தனியார் கான்டிராக்ட் நிறுவனமாகஇருக்கும்.
          இந்த நிலைமைதான் தொழிற்சங்கத்திற்கு சவாலாக இருக்கிறது.  உரிமைகளுக்காகக் கோரிக்கை வைத்து நிரந்தரத்தொழிலாளிகளைத் திரட்டுவது எளிதாக இருக்கிறதுஆனாலும் ஒப்பந்த ஊழியர்களைத் திரட்டுவது என்ற சவாலான பணியைNFTE  எடுத்துள்ளதுஅதன் ஒரு அம்சம்தான் இந்தக் கருத்தரங்கம்.
          சமவேலைக்கு சம ஊதியம் தீர்ப்பில் பல்வேறு தீர்ப்புகள் அடங்கி உள்ளனஇதுகுறித்து சுமார் 20 தீர்ப்புகள் உள்ளனநமக்குள்ள அனுபவம் காசுவல் லேபர் என்ற  ‘தினச்சம்பளக்காரர்கள்’ பற்றியது. 1975 மைசூரில்   நடைபெற்ற   சம்மேளளக் குழுக்கூட்டத்தில் ( Organise the Unorganised ) திரட்டப்படாத   தொழிலாளிகளைத்   திரட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
          1954 ல் ஈடி / காசுவல் மஸ்தூர் அனைவரையும் நிரந்தரம் செய் என்ற முரட்டுக் கோரிக்கையை விடுதலை பெற்ற நேருசர்க்கார் எதிர்கொண்டதுஇந்தியாவில் முதலாளிகள்தொழிலாளர் சங்கங்கள்ஆளும் அரசு இவர்களின் பிரதிநிதிகள் கூடிவிவாதிக்க   முத்தரப்பு மாநாடு கூட்டப்பட்டது.   சில சட்ட உரிமைகள்சட்டப் பாதுகாப்புஎனச்   சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
          நம்முடைய நாடு சட்டத்திற்கு உட்பட்டு ஆளப்படும் நாடுஇதில் பாராளுமன்றம் / நீதிமன்றங்கள் என்பன சட்டங்கள்இயற்றவும்அப்படி கொண்டுவரப்படும் சட்டங்கள் அரசியல் அமைப்பு சட்ட வரையரைக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதைக்கண்காணிக்கவும் செய்யும்இதைத் தாண்டி இந்திய நாட்டில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது?
          சட்டத்திற்கு உட்படாதசட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்கின்றன நமது நாட்டின் முதலாளிகளின்கூட்டமைப்புகள்.  இந்திய   முதலாளிகள்   சங்கமான ஃபிக்கியும் ( FICCI---Federation of Indian Chamber of Commerce and Industries)  மற்றும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) எனப்படும்  The Confederation of Indian Industry  (CII )போன்றவையும். 
            சட்டப்படியான சம்பளம் மற்றும் உரிமைகளை அமலாக்கமாட்டோம் என அடம் பிடிக்கும் இந்த முதலாளித்துவஅமைப்புகளைப் பற்றிக் கூறிப்பிடும் போதுதான்   தோழர் சுப்புராயன் அறைகூவல் விடுத்த அணி திரளுங்கள்’  என்பதுவருகிறது.

          பல தீர்ப்புகள் அடங்கி உள்ளன என முன்பு நான் கூறியதில் முக்கியமானது   2006 ல்  உமாதேவி வழக்கு என அறியப்படும்வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் பென்ச்சு வழங்கிய தீர்ப்பு. அதன் முக்கியமான அம்சம் அரசாங்க பணிஇடங்களை நிரப்புவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆளெடுப்பு விதிகள் மூலமாக மட்டுமே நடைபெற முடியும் ; வேறுவகையில் காலி இடங்களை நிரப்ப முடியாது.
          அதன் மூலமாகத்தான் கான்டிராக்டர் மாறினாலும் ஊழியர்களை மாற்ற   முடியாது, ஊழியர்கள் தொடர்ந்து பணிஅமர்த்தப்பட வேண்டும் என வேலை மறுக்கப்பட்ட 250 தோழர்களைக் காப்பாற்றினோம்.
 நம்முடைய சம்மேளனத்தின் முயற்சியால் DG (P&T)   யிடமிருந்து   உத்தரவு பெற்றோம் வருடத்திற்கு 240 நாட்கள் வீதம் மூன்றுஆண்டுகள் பணியாற்றியிருந்தால் நிரந்தர ஊழியர் சம்பளத்தில் முக்கால் சம்பளம்  அதுவே, ஐந்து ஆண்டுகள்பணியாற்றியிருந்தால் முழு சம்பளம் என்ற முன்னேற்றங்களைக் கண்டோம்
          
          நேரு யுவ கேந்திரா ஊழியர்கள் சங்கம் சல்யூட் செய்யப்பட வேண்டியவர்கள்.  அவர்களிடம் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவு என்ற போதிலும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தங்களுடையப் பகுதிக்கு சம வேலைக்கு சம சம்பளம் தீர்ப்பைப் பெற்றார்கள்.  அந்தத் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி தபால் தந்தித் துறையில் பாரதிய சங்கம் வழக்கு தொடர்ந்தது. தலைவர் குப்தா நம்முடைய சங்கத்தையும் அந்த வழக்கில் இணைத்துக் கொண்டு கடுமையாக      முயன்றதற்குப்   பிறகுதான1986 உச்சநீதி  மன்றம்  கேசுவல்  மஸ்தூர்  ஊழியர்களை நிரந்தரம் செய்ய  வழிவகை  செய்த ஒரு  போற்றத்தக்க  தீர்ப்பை   வழங்கியது.   ஓராண்டு   தொடர்ந்து   பணியில் இருந்திருந்தாலே நிரந்தரம் செய்ய திட்டம் வகுக்க வேண்டும் என அரசை அறிவுறுத்தியது.  நிரந்தரம்  செய்தது மட்டுமின்றி ஊதிய  நிலுவைத் தொகையைதயும் பெற்றுத் தந்தோம்.
     P&T மேனுவலிலேயே காசுவல் மஸ்தூர்களை பணியமர்த்தும் ஷரத்துகள்  நீக்கப்பட்டு விதிகள் திருத்தப்பட்டன. கேசுவல்    /   ஒப்பந்த ஊழியர் /      தற்காலிக ஊழியர்  என அழைக்கப்படும்  பணித்தன்மைகளில்  சட்டரீதியான   நுட்பமான வித்தியாசங்கள் உள்ளன.
          
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு ஹரீஷ் ராவத் அவர்களிடம் ஒப்பந்த   ஊழியர்களுக்கு கிராக்கிப் படி சேர்த்து வழங்ககோரிக்கை மனு அளித்தோம் தோழர்   தமிழ்மணியும் முரளியும் தொடர்ந்து முயற்சி செய்து டிஏவை சேர்த்துத்       தர  உத்தரவு  பெற்றனர்.  இப்படி ஒப்பந்த ஊழியர்களின்  தொடர்   வேலைப் பாதுகாப்பையும் சம்பளத்தையும் உத்தரவாதப்படுத்தியுள்ளோம்.          1970  ஒப்பந்த ஊழியர்கள் ( ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்ட விதி 25 ல் துணை விதி 2 ன் கீழ் iv  என்பது சம்பளம்எப்படி அமைய வேண்டும் எனப் பேசுகிறது அது 1948 சட்டத்தின் படி அல்லது ஒருவர்க்கொருவர் பேசி ஒப்பந்தம் செய்துகொண்டபடி அல்லது குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி அமையலாம் என்கிறது. இந்த நிலையில்தான், குறைந்த பட்ச ஊதியத்தினைமாற்றியமைக்க வேண்டும் என்ற மத்திய சங்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக மார்ச் 30, 2016 ல் ரூபாய் 10  ஆயிரம்கொடுக்க  வரைவு  அறிக்கை  (Draft மசோதா) வந்தது  அது நகல் மசோதாவாகவே  இருக்கிறதே தவிர கெசட் நோட்டிபிகேஷனாகஉத்தரவாக வெளிவரவில்லை. இந்த நகல் மசோதாவை எதிர்த்தே முதலாளிகளின் சம்மேளனங்கள் / அமைப்புகள் பலத்தஎதிர்ப்புக் குரல் எழுப்பத் தொடங்கி  விட்டன    இன்றைக்கு   நாம் வாங்குகின்ற சில ஆயிரத்தை விட மசோதாவின் சிபார்சு அதிகம்என்றாலும் நாம் முன் வைத்த கோரிக்கை குறைந்த பட்சம் ரூபாய் 15,000/=.  ஆனால் ஏழாவது சம்பளக் குழு அறிக்கைக்கு பின்னர்மத்திய சங்கங்களின் கோரிக்கை ரூ 18, 000/=.   இது தர்க்க அடிப்படையிலானது.

          நகல் மசோதா பற்றி அமைச்சர்கள் குழு, நிதி அமைச்சர் திரு அருண் ஜேட்லி மத்திய தொழிற்சங்க அமைப்புகள் முதலாளிகள்பிரதிநிதிகளுடன் பேசியது. ஒரு நாளைக்கு ரூ 350/-வீதம் 26 நாட்களுக்கு   ரூபாய் 9100/=   குறைந்த   பட்சமாக   மாற்றியமைக்கலாம்     எனத் தெரிவித்தது.  முதன்முறையாக ஒரு குறிப்பிட்ட தொகையை ரூபாயாக அறிவித்தது இதுவே முதன்முறை என்பது வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால் நம்முடைய தொழிற்சங்கங்கள்  இந்தத் தொகை   குறைவானது அநீதியானதுஎன  ஏற்கமறுத்து விட்டன.    நகலை அசலாக்க நாம் பயணிப்போம்.  
    நன்றி!    வணக்கம்