மார்க்சியம் என்றால் என்ன?...
கடவுளாக இருந்தாலும் கம்ப்யூட்ராக இருந்தாலும் மனிதன்
பராமரித்தால் தான் பரவசமாக இருக்கும் . இல்லையென்றால் பாழடைந்திருக்கும். எனவே
மார்க்சியம் கடவுளுக்கோ, கம்ப்யூட்ரோக்கோ
எதிரானது என்பது இல்லை. படைக்கப்பட்ட
எல்லா பொருட்களும் மனிதனால் உருவாக்கப்பட்டது. எனவே பராமரிக்க மனிதன் தேவையென்று
மார்க்சியம் கூறுகிறது. முதாலாளி, தொழிலாளி அதிலும் ஏற்றத்தாழ்வு. முதாலாளி
என்பவர் தொழிலாளியின் உழைப்பால், உற்பத்தியால் உயரக்கூடியவர். ஆகவே தொழிலாளியின்
உற்பத்தியின் லாபத்தில் பங்கு வேண்டும். அவன்
இளமைக்காலம் முழுமையும் உழைப்பதால் முதுமை காலத்தில் அவன் வாழ ஓய்வு ஊதியம்
வேண்டும். உழைக்கும் போதே வாழ்வதற்கு தேவையான ஊதியம் வேண்டும். முதுமை காலத்தில்
வாழ்வதற்கு தேவையான ஓய்வு ஊதியம் வேண்டும். இதனை பெறுவதற்கு இளமைக்கும்
முதுமைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில் அவன் போராடி காலங்கள் கழிக்க நேரிடுகிறது. இதனை மாற்ற
வேண்டும் என்பது தான் மார்க்சியம். மார்க்சியம் முதலாளிகள் வேண்டாம் என்று
சொல்லவில்லை. தொழிலாளி மதிக்கதக்க வகையில் வாழ வேண்டும்
என்பதே மார்க்சியம். ஆகவே உச்ச நீதிமன்றம் 26-10-2017 அன்றைய தீர்ப்பின் அடிப்படையில் ஒப்பந்த
தொழிலாளி யாவரும் மதிக்கதக்க மனிதனே அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சம வேலைக்கு சம
ஊதியம் உள்பட அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டும் என்று மார்க்சியத்தை உருவாக்கிய
மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் 200வது பிறந்த ஆண்டில் நியாயம் கிடைக்க
சபதமேற்ப்போம்.
தோழமையுடன்
R.செல்வம்
பொதுச் செயலர், TMTCLU
No comments:
Post a Comment