தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Tuesday 14 March 2017

திருநெல்வேலி  TMTCLU மாவட்ட மாநாடு
தோழர்களே,
        வணக்கம்  திருநெல்வேலியில்  நமது TMTCLU  சங்கத்தின்  மாவட்ட மாநாடு தோழர் பரமசிவம் அவர்களின் தலைமையில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் சுமார் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் கலந்து கொண்டனர். துவக்கவுரையாக நமது TMTCLU மாநில பொருளாளரும் குடந்தை மாவட்டத்தின் மாவட்ட செயலருமான தோழர் M.விஜய்  உரையின் போது இந்த சங்கம் தோழர் ஜெகன் தலைமை வகித்த சங்கம் என குறிப்பிட்டிருந்தார்.. வாழ்த்துரையாக தோழர் தூத்துக்குடி பாலு அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். மற்றும் NFTE- முன்னாள் தலைவர் தோழர் அருணாசலம் அவர்களும், சண்முகவேல் மாவட்ட உதவிச் செயலர்-NFTE/TVL  , பச்சையப்பன் மாவட்ட உதவித் தலைவர் NFTE/TVL   வாழ்த்துரை வழங்கினார்கள்.

        சிறப்புரையாக தோழர் ப.காமராஜ் மாநில தலைவர் NFTE அவர்கள்  TMTCLU  சங்கத்திற்கு எப்போதும் தமிழ் மாநில சங்கம் துணை நிற்கும் என்று தமது உரையில் குறிப்பிட்டார். ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தார். நிரைவுறையாக நமது  மாநில பொதுச் செயலர் தோழர் R.செல்வம்  அவர்கள் நிர்வாகிகளை வாழ்த்தி நமது TMTCLU சங்கம்  பல்வேறு சாதனைகளை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு செய்து கொண்டிருக்கிறது என்றும் இன்னும் பல்வேறு சாதனைகளை செய்யவும் தொடர் முயற்சி எடுத்து வருகிறது என்றும், NFTE தலைமை பல முறை மாநில நிர்வாகத்தோடு பேச்சு வார்த்தைக்கு  செல்லும் போதெல்லம் நமது TMTCLU  நிர்வாகிகளை அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அதில் தீர்வும் கண்டுள்ளது என்று பெருமைபட கூறினார்.

 இறுதியாக  தோழர் P.பழனிவேல் மாவட்ட உதவிச் செயலர் NFTE/TVL அவர்கள்  நன்றியுரை கூறினார். கஷ்டப்படும் அடிமட்ட தொழிலாளர்களுக்காக தோழர் ஜெகன், தோழர் தமிழ்மணி ஆகியோர்   வளர்த்த TMTCLU  சங்கத்தினை திருநெல்வேலியில் துவக்க  அரும்பாடு பட்ட உன்னத தோழர் P.பழனிவேல் அவர்களை  TMTCLU  தமிழ் மாநிலச் சங்கம் மனதார பாராட்டுகிறது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு திருநெல்வேலி NFTE என்றும் துணை நிற்கும்....

மாநாட்டில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள்  அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
தலைவர்                              : P.பழனிவேல் TT
உதவி தலைவர்                    : S.சுரேஷ்
செயலர்                               : M.ராஜ்குமார் STR
உதவிச் செயலர்கள்               : P.சேகர்
                                           : S.குமார்
                                           : S. மணியம்மாள்
பொருளாளர்                        : A.பால்ராஜ்
செயற்குழு உறுப்பினர்கள்     : V. செல்வம்
                                           : ராமகிருஷ்னன்
                                           : B.காந்திமதி
                                           : V. நித்யா
                                           : P.ரமேஷ்குமார்
                                           : P.காந்திமதி

                                           : K.பட்டுக்குமார்





Thursday 9 March 2017

முக்கிய செய்தி

            நமது  NFTE - TMTCLU சங்கங்களின் சார்பில்  தமிழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பனித்தன்மைக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் என நமது மத்திய சங்கத்திற்கு கடிதம் அனுப்பபட்டது
            அதன் அடிப்படையில் நமது மத்திய சங்கம்  ஒப்பந்த ஊழியர்களுக்கு பனித்தன்மைக்கேற்ப ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு  கார்ப்பரேட் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதன் நகல் கீழே....




Tuesday 7 March 2017

               FLASH NEWS

மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட குறைந்த பட்ச  ஊதியத்தினை  நமது  துறையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியருக்கு வழங்கிட  நமது  மாநில சங்கத்தின் தொடர்  முயற்சி காரணமாக இன்று (07-03-2017) உத்திரவு வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 19-01-2017 முதல் ரூ350/- தினக்கூலியாக மாநிலம் முழுமையும் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு  வழங்கிட நமது மாநில நிர்வாகம்  உத்திரவு வழங்கியுள்ளது..


தொடர் முயற்சி எடுத்திட்ட நமது மாநில சங்கங்களுக்கு நன்றி...
NFTE-TMTCLU

கள்ளக்குறிச்சியில் TMTCLU கிளை மாநாடு மிகச் சிறப்பாக தோழர் பா.அழகிரி தலைமையில் நடைபெற்றது. தோழர் V.இளங்கோவன் மாவட்ட அமைப்புச் செயலர் TMTCLU, துவக்கயுரையாற்றினார். தோழர் A.சுப்ரமனியன் மாநில உதவிச் செயலர் TMTCLU, தோழர் G.ரங்கராஜ் மாவட்ட செயலர் TMTCLU, M.S.குமார் மாவட்டத் தலைவர் TMTCLU, A.பாஸ்கர் கிளைச் செயலர் TMTCLU/ULD, KAC கிளைச் செயலர் தோழர் S.மணி மற்றும்  R.மலர்வேந்தன் கிளைச் செயலர்/NKM ஆகிய்யோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக தோழர் R.செல்வம் மாநில பொதுச் செயலர்  சிறப்புரையாற்றினார். தோழர் ராமசந்திரன் நன்றியுரை கூற கூட்டம் முடிவுற்றது.

கிளை மாநாட்டில்  தோழர் P.ராஜேந்திரன் , தோழர் E.C.கன்ணன், தோழர்  பிரபு ஆகியோர் தலைவர் , செயலர், பொருளர் முறையே ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளை மாநாட்டினை சிறப்பாக நடத்திட்ட தோழர் S.மணி ,P.ராஜா மாவட்ட உதவிச் செயலர் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.



-converted-space"> 2 mins