தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Sunday 30 October 2016

சம வேலைக்கு சம ஊதியம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக தற்காலிக ஊழியர்களுக்கும் சம்பளம்...



      சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதிமுறை அனைத்து பணி மற்றும் பணியாளர்களுக்குப் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பில் தினசரி ஊதியம், தற் காலிக பணியாளர், ஒப்பந்த ஊழி யர் ஆகியோருக்கு நிரந்தர பணி யாளர்களுக்கு அளிக்கப்படும் அதே அளவுக்கு ஊதியம் வழங்கப் பட வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
     சம வேலைக்கு சம ஊதியம் மறுக்கப்படுவதானது, அடிமைத் தனமாகக் கருதப்படும். அடக்கு முறை, அடக்கி ஆளுதல், சிறுமைப் படுத்தல் ஆகியவை போலத்தான் கருதப்படும். தொழிலாளர் நலன் விரும்பும் மாநிலங்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை அனைத்து துறையிலும் கடைப் பிடிக்க வேண்டும் என்று தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது.
        பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில தற்காலிக பணியாளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஊதிய மானது குறைந்தபட்ச ஊதிய விதி யைக் கூட பூர்த்தி செய்யவில்லை என வழக்கு தொடர்ந்தனர். ஆனால் மாநில அரசுக்கு சாதகமாக அம்மாநில நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தற்காலிக பணியாளர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளனர்.
          ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பலன்களை அளிக்காம லிருக்க பல்வேறு செயற்கையான காரணங்கள் கூறப்படுவதாக தாங்கள் கருதுவதாக நீதிபதிகள் ஜே.எஸ்.காதர், எஸ்.ஏ. போப்டே ஆகியோரடங்கிய அமர்வு தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது. ஒரு பணிக்காக தேர்வு செய்யப் படும் ஊழியருக்கு அதே பணியைச் செய்யும் நிரந்தர பணியாளருக்கு அளிக்கப்படும் அளவுக்கு ஊதியம் வழங்கப்படும். இதில் மாற்று கருத்துகளுக்கு இடமிருக்க முடி யாது. வேலை நிறுத்தம் போராட்டங்கள் மேற்கொள்வதன் முக்கிய காரணமே தாங்கள் கவுரமிக்கவர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்து வதற்காகத்தான் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
           குறைந்த ஊதியத்திற்காக யாருமே பணியாற்ற முன் வருவ தில்லை. ஆனால் அவ்விதம் நிர் பந்திக்கப்படுகின்றனர். அந்த குறைந்தபட்ச ஊதியத்தின் மூலம் தானும் தன்னைச் சார்ந்தவர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளதுதான் நிதர்சனம். இதனாலேயே தங்களது சுயமரி யாதை மற்றும் சுய கவுரவத்தை இழந்து குறைந்த ஊதியத்தில் பணி புரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
           சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார உரிமை தொடர்பாக 1966-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதியில் இந்தியாவும் கையெழுத் திட்டுள்ளது. இதன் விதிமுறைகள் ஏப்ரல் 10, 1979 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதிமுறையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

          சட்ட விதிகளில் பல்வேறு விளக் கங்கள் இருந்தாலும் இந்திய அரசி யலமைப்பு விதி 141-ல் சம வேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமே இல்லை. ஊழியர் நிரந் தரப் பணியாளரா அல்லது தற் காலிக பணியாளரா என்ற பேதம் கிடையாது. ஊதியம் அனை வருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                                                             நன்றி:- தி தமிழ் இந்து....

Friday 28 October 2016

அனைவருக்கும்   
இனிய  தீப  திருநாள்  நல்வாழ்த்துக்கள் 





Tuesday 25 October 2016

நமது கடித்தின் அடிப்படையில் இன்று 25.10.2016

குடந்தையில் 10.09.2016 அன்று TMTCLU மாநில செயற்குழுவில்  எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் TMTCLU  மற்றும் NFTE மாநில செயலாளர்கள்   நமது  CGM  அவர்களை 20.10.2016 அன்று சந்தித்து  கடிதம்  அளித்தனர்  

*  8 மணி நேர  வேலை மாநில முழுவது      
    அமுல் படுத்து வேண்டும்   

* Nodal  அதிகாரியை  மாவட்டதோறும் உடனடியாக      நியமிக்கவேண்டும்

*அடையாள அட்டை உடனடியாக  வழங்க  வேண்டும்

* ESI  அடையாள அட்டை உடனடியாக வழங்க    வேண்டும்

*EPI   பணம்  கட்டுவதை  உறுதிபடுத்தவேண்டுமென  கோரிக்கைகள்  அளிக்கபட்டது


நமது கடித்தின்  அடிப்படையில்  இன்று   25.10.2016 அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு  மாநில  நிர்வாகம்  கடிதம் அனுப்பிஉள்ளது      

Saturday 22 October 2016

10 பேர் இருந்தால் பிஎப் பிடித்தம் திட்டம் மறுபரிசீலனை

ஒரு நிறுவனத்தில் 20 பேர் இருந்தால் பிஎப் பிடிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இதை 10 பேர் வேலை செய்தாலே பி.எப் பிடித்தம் செய்யும் வகையில் மாற்றும் பரிந்துரையை அமைச்சரவை நிராகரித்தது. இதுகுறித்து குறிப்பிட்ட மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, இதுகுறித்து மீண்டும் பரிசீலனை செய்யப்படும். 
தொழிலாளர் பாதுகாப்பு மட்டுமின்றி, இதை அமல்படுத்தினால் சிறு நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பும் ஆராயப்படும். பங்குச்சந்தையில் கடந்த செப்டம்பர் 30 வரை பிஎப் பணம் 9,148 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 9.43% லாபம் கிடைத்துள்ளதுஎன்றார்

Principal employer BSNL

 ஒப்பந்த ஊழியரை .... வேலை  வாங்கும் 
Principal employer  BSNL நிறுவனமே ! 
அதற்கான  பொறுப்பான அதிகாரிகள் ... 
ஒப்பந்த ஊழியருக்கான அனனத்து  தொழிலாளர் நல  சட்ட  திட்டங்களும்  ஒப்பந்தகாரர்களால்   முறையாக  அமுல்  படுத்தபடுகிறதா ?  என்பதனை கண்காணிக்கும்  பொறுப்பு  நமக்கு மிக  அவசியம்  
என வலியுறுத்தும்  கடிதம் .....

சம்பளம் ...புதுசு

குடந்தை மாவட்டதில்  TMTCLU   மற்றும் NFTE    மாவட்ட சங்க தொடர்  முயற்சியால்  ஒப்பந்த  ஊழியருக்கு  போனஸ் 8.33 முறை படி ஒப்பந்த  ஊழியருக்கு  6.10.2016  அன்றும் கேபிள்  ஒப்பந்த ஊழியருக்கு 21.10.2016 அன்றும்  போனஸ்  மற்றும்   புதிய சம்பளம்  வழங்க  முறைபடுத்தியுள்ளோம்   என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்து கொள்கிறோம்  உத்தரவை அமல்படுத்த முனைப்புடன் செயல்பட்ட  குடந்தை  மாவட்ட  நிர்வாகத்திற்கு   நன்றி ...

                                                                                 மாவட்ட சங்கம்  - TMTCLU -குடந்தை       
குடந்தை மாவட்டதில்  TMTCLU   மற்றும் NFTE    மாவட்ட சங்க தொடர்  முயற்சியால்  ஒப்பந்த  ஊழியருக்கு  போனஸ் 8.33 முறை படி ஒப்பந்த  ஊழியருக்கு  6.10.2016  அன்றும் கேபிள்  ஒப்பந்த ஊழியருக்கு 21.10.2016 அன்றும்  போனஸ்  மற்றும்   புதிய சம்பளம்  வழங்க  முறைபடுத்தியுள்ளோம்   என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்து கொள்கிறோம்  இதை  ஆவணம் செய்த  மாவட்ட  நிர்வாகத்திருக்கும்   அதிகாரிகளுக்கும்  நன்றி ...

                                                                                      மாவட்ட சங்கம்  - TMTCLU -குடந்தை      

Friday 14 October 2016

ஒப்பந்த ஊழியர் செய்தி
(13-1௦-2௦16)

தோழர்களே !
     இன்று ( 13-1௦-2௦16) நமது NFTE மாவட்ட செயலர் தோழர் இரா. ஸ்ரீதர் ,TMTCLU பொதுச் செயலர் தோழர் R.செல்வம் ஆகியோர் நமது DGM(A) அவர்களை ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ் மற்றும் ஊதிய உயர்வு பற்றி பேசினார்கள். அதில் சுமூக தீர்வும் எட்டப்பட்டது.

  • கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு ரூ 285/- வீதம் உயர்த்தி அறிவித்துள்ளது. அந்த சம்பளத்தினை நாம் தரவேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நிர்வாகமும் தருவதாக உறுதியளித்துள்ளது.  4-1௦-2௦16 முதல் நிலுவைத் தொகையினை வழங்குவதற்கும் சம்மதித்துள்ளது.
  • இந்த ஆண்டு போனஸ் ரூ 7௦௦௦/- ஒப்பந்த ஊழியருக்கு 21-1௦-2௦16 க்குள் வழங்குவதற்கு நிர்வகாத்தால் தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி

                                                                                         தோழமையுடன்                               
                                                                             NFTE-மாவட்டச் சங்கம்,கடலூர்
                                                              TMTCLU - மாவட்டச் சங்கம், கடலூர்.

Thursday 6 October 2016

பாராளுமன்றகுழு அங்கீகரித்த குறைந்தபட்ச சம்பளத்தை உறுதிசெய்திடவும் 
ஒப்பந்தக்காரர்க்கு CHEQUE /ONLINE PAYMENT மூலம் PAYMENT பட்டுவாடா செய்திடவும் வலியுறுத்தி BSNL உத்தரவு பிறப்பித்துள்ளது .
உத்தரவு காண 

Tuesday 4 October 2016

அநீதி களையப்பட்டது

கிருஷ்ணகிரியில் சுமார் 40 ஒப்பந்த ஊழியர் தோழர்கள் மாற்று சங்கத்திலிருந்து நமது TMTCLU சங்கத்தில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கு முன் முயற்சி செய்திட்ட தோழர் பாரதிதாசன் (ஒப்பந்த ஊழியர்-கிருஷ்ணகிரி) BSNLEU சங்கத்தின் துரோகத்தினால் பழிவாங்கப்பட்டு இரண்டு மாத காலம் பணியிலிருந்து நீக்கப்பட்டார். நமது NFTE-TMTCLU மாநில சங்கத்தின் முயற்சியினால் மீண்டும் அந்த தோழர் பணியமர்த்தப்பட்டார். அத்தோழருக்கு நமது வாழ்த்துக்கள். 


TMTCLU- செய்தி
NFTE-TMTCLU மாநில சங்கங்கள் இணைந்து ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து மாநில நிர்வாகத்துடன் 20-09-2016 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில் நிர்வாகம் அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. ஆகவே தலமட்ட NFTE-TMTCLU சங்க மாவட்ட செயலர்கள் தலமட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய ஆவணங்களை மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிட வலியுறுத்திட வேண்டும். இது பற்றிய தகவல்களை உடனடியாக மாநில சங்கத்திற்கும் தெரிவித்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தோழமையுள்ள
R.செல்வம்

மாநில பொதுச்செயலர்-TMTCLU