ஓரடி முன்னால்...
இன்று 23/11/2015
காரைக்குடி மாவட்ட நிர்வாகத்துடன்
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளின் கோரிக்கைகள் மீது
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பல்வேறு பிரச்சினைகளில் நிர்வாகம்
சாதகமான நிலை எடுத்துள்ளதால்
நமது 24/11/2015 உண்ணாவிரதப்போராட்டம்
விலக்கிக்கொள்ளப்பட்டது.
அடிமட்ட ஊழியர்களின் நியாயமான
கோரிக்கைகள் தீர்விற்கு வழி வகுத்த
அருமைத்தோழர்.ஆர்.கே.,
TMTCLU மாநிலச்செயலர் தோழர்.செல்வம்,
தமிழ் மாநிலச்சங்கம்,
தமிழ் மாநில நிர்வாகம் மற்றும்
காரைக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு
நமது நன்றிகள் பல...
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் தீர்வில்
தொடர்ந்து நம்மோடு இணைந்து செயல்பட்ட
BSNLEU சங்கத்திற்கு நமது நன்றிகள் உரித்தாகுக...
பேச்சு வார்த்தையில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
- பல்வேறு மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது போல் மாதம் 26 நாட்கள் ஊதியம் நடைமுறைப்படுத்தப்படும்.
- மாதந்தோறும் உரிய தேதியில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- 2016 பொங்கல் பண்டிகைக்கு போனஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
- மாதந்தோறும் சம்பளப்பட்டியல் WAGE SLIP வழங்கப்படும்.
- இந்த மாதம் ESI மருத்துவ அட்டை வழங்கப்படும்.
- அடையாள அட்டை டிசம்பரில் வழங்கப்படும்.
- வைப்புநிதி UAN வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- பிடித்தம் செய்து வைக்கப்பட்டுள்ள வைப்பு நிதி EPF WITHHELD AMOUNT ஜனவரி 2016க்குள் ஊழியரின் கணக்கில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
- மரணமுற்ற தோழர்.ஆரோக்கியசாமி அவர்களின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடைக்க வழி வகை செய்யப்படும்.
- நிரந்தர ஊழியர் இல்லாத இடங்களில் தனியாகப் பணி செய்யும் தோழர்களுக்கு எட்டு மணி நேரப்பணி வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.
- தேசிய விடுமுறைக்கு சம்பளம் வழங்கப்படும்...
தோழர்களே...
ஒப்பந்த ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளான
சம்பளத்துடன் கூடிய வார ஓய்வு..
மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த கூடுதல் கூலி...
அவரவர் செய்யும் பணிக்கேற்ற சம்பளம்...
சிறு விடுப்பு, ஈட்டிய விடுப்பு...
கேபிள் பணி செய்யும் தோழர்களுக்கு கூடுதல் சம்பளம்...
காவல் பணி செய்வோருக்கு WATCH AND WARD சம்பளம்...
போன்ற கோரிக்கைகள் மீது எந்தவித முன்னேற்றமும் இல்லை..
இவை யாவும் தங்களது நிர்வாகத்தின்
அதிகார வரம்புக்குட்படாதவையாக
மாவட்ட நிர்வாகம் கருதுகிறது..
ஆயினும் அடிப்படையான
ஒரு சில பிரச்சினைகளில் தீர்வை எட்டியுள்ளதால்
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் பின்னடைவை எட்டாமல்
ஓரடி முன்னேறியுள்ளது என்றே நாம் கருத வேண்டியுள்ளது.
தோழர்களே...
கைக்கெட்டிய உரிமைகளுக்காக மகிழ்வு கொள்வோம்...
கைவராப்பலன்களுக்காக கவலை கொள்ளோம்...
காலம் கனியும் போது களம் காண்போம்...
ஒப்பந்த ஊழியர் நலம் காப்போம்...
No comments:
Post a Comment